search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 10 விமான சேவை இன்று ரத்து
    X

    சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 10 விமான சேவை இன்று ரத்து

    • பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல், இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகா ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.


    இதைப்போல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு பெங்களூரில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் ஒரு மணிக்கு, அந்தமானில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும், வருகை விமானங்கள்5, புறப்பாடு விமானங்கள் 5, மொத்தம் 10 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரி கள் கூறும்போது, போதிய பயணிகள் இல்லாமலும் விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும், இன்று 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டு உள்ளதால், விமானங்கள் ரத்து காரணமாக, பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றனர்.

    Next Story
    ×