search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு பணிக்காக சென்னையில் 2 நாட்கள் மின்தடை
    X

    பராமரிப்பு பணிக்காக சென்னையில் 2 நாட்கள் மின்தடை

    • மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்கள் மின்தடை.
    • 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை அம்பத்தூர் ஜெ.ஜெ.நகர் தொழிற்பேட்டை, முகப்பேர் கிழக்கு, எழும்பூர், கொத்தவால் சாவடி, மண்ணடி, என்.எஸ்.சி. போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, போரூர் பி.டி.நகர் மெயின் ரோடு, வியாசர்பாடி வி.எஸ்.மணி நகர், கிண்டி ராம்நகர், ஆவடி லட்சுமிபுரம், பல்லாவரம் நாகல்கேணி, ஆழ்வார்திருநகர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் நாளை (8-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், வளசரவாக்கம், கிண்டி சாந்திநகர், திருமுல்லைவாயல், அலமாதி, எடப்பாளையம், சி.டி.எச். சாலை, சோழவரம், சிறுனியம், சோத்துப்பெரும்பேடு, கோவில்பதாகை, பாண்டேஸ்வரம், புழல், பல்லாவரம் ஜெயின், மதுரவாயல் ஆலப்பாக்கம், போரூர், கோவூர், கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் வருகிற 9-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×