என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயிலில் கைதி கொலையுண்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் 3 பேர் கோவையில் சிக்கினர்
- 3 வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
கோவை:
கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று நள்ளிரவு ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்த மாடசாமி (வயது27), அவரது தம்பி சுபாஷ் (25), அதே ஊரைச் சேர்ந்த பசும்பொன் (27) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் மூன்றடைப்பை சேர்ந்தவர் முத்து மனோ (28) என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோவையில் யாரையாவது கொலை செய்யும் நோக்கில் அவர்கள் கூலிப்படையாக கோவைக்கு வந்தார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.






