search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 37 ஆர்.சி. புத்தகம் மாயம்- 5 ஊழியர்கள் சஸ்பெண்டு
    X

    தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 37 ஆர்.சி. புத்தகம் மாயம்- 5 ஊழியர்கள் சஸ்பெண்டு

    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது.
    • புத்தகம் மாயமான சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் அலுவலகத்துக்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் மாயமானது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×