என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • தமிழ்நாட்டின் தொழில் துறையில் இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர்.
    • தமிழ்நாட்டின் சிறு தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரக்கூடியவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

    செங்கல்பட்டில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நீர் நிலைகளும், ஏரிகளும் நிறைந்து நீர் நிலைகளில் செங்கலு நீர் பூக்கள் அதிகமாக இருப்பதால் செங்கலு நீர்பட்டு என்று அழைக்கப்பட்டு இன்றைக்கு தலைநகர் சென்னையோட நுழைவு வாயிலாக இருக்க கூடிய இந்த செங்கல்பட்டு. சிற்பக் கலையும், அதனுடைய சிறப்பையும் தமிழ் கலை பெருமையை சொல்லும் மாமல்லபுரம் உள்ள மாவட்டம் இந்த செங்கல்பட்டு. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியில் சிறந்து கழக ஆட்சி காலத்தில் மகேந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ. பிலெக்டரானிக்ஸ், பாக்ஸ் கான், டெல், சாம்சங், இன்போசிஸ், டி.வி.எஸ்., சீமென்ஸ், நிதான், போர்ட், அப்பல்லோ டயர்ஸ், பல்லாவரத்தில் தமிழ்நாடு டாடா பார்மா சூட்டில்கல் தொழிற்சாலை.

    மறைமலைநகரில் மெட்ராஸ் மெக்னடிக் மீடியா லிமிடெட் தொழிற்சாலை 532 ஏக்கர் நிலத்தில் எம்.பி.பி.எல். புதுப்பிக்கப்பட்ட நிறுவனம், திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பளவில் எந்திரங்கள் மூலம் உப்பு உற்பத்தி தொழிற்சாலை, ஸ்ரீராம் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, சிங்கபெருமாள் கோவில் அருகே மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் எந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கிற தொழிற்சாலை இப்படி தமிழ்நாட்டோட வளர்ச்சிக்கான நுழைவு வாயிலை உருவாக்கியது நம்முடைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.

    இயற்கை வளம், கலைப்பெருமை, தொழில் வளர்ச்சி என சிறந்து விளங்கும் இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த அரசு விழாவை மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருக்க கூடிய பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசனை மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

    ஏராளமான குறு-சிறு நடுத்தர நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாட்டின் சிறு தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரக்கூடியவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

    முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதிலே இவருடைய பங்கும் இருக்கிறது. அவரது உழைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

    தமிழ்நாட்டின் தொழில் துறையில் இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். பெண்கள் முன்னேற்றம் குறித்த பெரியாரின் கனவுகளை சட்டத்தின் மூலம் நனவாக்கியவர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டம் 7.5.1989-ல் சட்டசபையில் நிறைவேற்றியவர் கலைஞர்.

    பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கோலோச்சுகின்றனர். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கையை கொடுத்து உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது இந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 800 ஏக்கரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று திமிராக பேசுகிறார் மத்திய மந்திரி. தேசிய கல்விக்கொள்கை, தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சியையே அழித்து ஓழித்து விடும். கல்வியை தனியார் மயமாக்கும் கொள்கைதான் தேசிய கல்விக்கொள்கை. பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும். கல்வியில் மதவாதத்தை புகுத்த தேசிய கல்வி கொள்கை முயற்சிக்கிறது. கல்வியில் ஒன்றிய அரசின் அதிகார குவிப்புக்கு வழி வகுக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • 50,606 பயனாளிகளுக்கு ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றம் சென்றார்.

    அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நெடுக நின்றிருந்த பொதுமக்களை சந்தித்தார்.

    இந்த 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் திரளாக நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காரை விட்டு இறங்கி நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார்.

    இதே போல் செங்கல்பட்டு நகரின் நுழைவு பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    இதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கீரப்பாக்கத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள், நெம்மேலி ஊராட்சியில் துஞ்சம் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட 47 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.280 கோடியே 38 லட்சம் ஆகும்.

    இதே போல் ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மேலும் நகர்ப்புற பகுதிகளில் பட்டா இல்லாத குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் 21 ஆயிரம் பேர்கள் பயன் அடைவார்கள். மேலும் இந்த விழாவில் 50,606 பயனாளிகளுக்கு ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    செங்கல்பட்டு விழாவின் மூலம் மொத்தம் ரூ.1,285 கோடி மதிப்பிலான திட் டங்கள் உதவிகள் பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ரவி, கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டலக் குழுத் தலைவர்கள் பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் நடந்து வருவதை பார்த்ததும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருக்கழுக்குன்றம் வழியாக சென்றார்.

    அப்போது காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றத்தில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நெடுக நின்றிருந்த பொதுமக்களை சந்தித்தார்.

    இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்றனர். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி நடந்து சென்று மக்களின் வர வேற்பை பெற்றுக் கொண்டார்.

    முதலமைச்சர் நடந்து வருவதை பார்த்ததும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.

    மாணவ-மாணவிகள் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    நீங்கள் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    கல்லூரி உதவித்தொகை மாதம் ரூ.1000 வழங்குவதற்கும் மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். நரிக்குறவ பெண்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாசி மாலை அணிவித்து மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் செல்பி எடுக்க திணறியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த செல்போனை வாங்கி அவரே போட்டோ எடுத்து கொடுத்தார்.

    குழந்தைகளையும் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். சாலையின் இடது புறம் பொதுமக்கள் வழி நெடுக நின்று வரவேற்பு கொடுத்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மாநகரின் எலலைக்கு வந்தபோதும் அங்கேயும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்றிருந்தனர். மக்கள் வெள்ளத்தில் அவர் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டார்.

    மொத்தம் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடந்ததால் திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு சாலை கோலாகலமாக காட்சி அளித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோத்ரேஜ் நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவியது எனக்கு 2 மடங்கு மகிழ்ச்சி தருகிறது.
    • இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுவது அனைவரும் அறிந்ததே.

    செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் சிப்காட்டில் கோத்ரேஜ் ஆலையில் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * வரலாற்று சிறப்புமிக்க கோத்ரேஜ் நிறுவனத்தின் அதிகாரிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறேன்.

    * கோத்ரேஜ் நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவியது எனக்கு 2 மடங்கு மகிழ்ச்சி தருகிறது.

    * அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு வருடத்திலேயே கோத்ரேஜ் நிறுவனம் திறந்துவைக்கப்பட்டுள்ளது எனக்கு பெருமை.

    * இந்தியாவில் மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் தமிழ்நாடு தான்.

    * நேர்மறையான சிந்தனைகள் எப்போதும் வெற்றியில் தான் முடியும்.

    * முதலீட்டாளருக்கு தேவையான அனைத்து ஆதரவு சேவையையும் தி.மு.க. அரசு செய்து வருவதால் பெரும் முதலீடு ஈர்ப்பு.

    * கோத்ரேஜ் நிறுவனம் தனது ஆலையில் 50 சதவீத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.

    * திருநங்கைகளுக்கு கோத்ரேஜ் நிறுவனத்தில் பணி வழங்கியமைக்கு மனதார நன்றி கூறுகிறேன்.

    * உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி என அறிவித்த கோத்ரேஜ் நிறுவனத்திற்கு நன்றி.

    * தமிழகத்தில் 4-ம் தலைமுறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அதிநவீன திட்டம்.

    * இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுவது அனைவரும் அறிந்ததே.

    * சென்னையின் நுழைவு வாயிலான செங்கல்பட்டை போல் இந்தியாவின் பொருளாதார முதலீட்டின் நுழைவுவாயிலாக தமிழகம் உள்ளது.

    * சாதகமான வணிக சூழல் நிலவும் தமிழகத்தில் உங்கள் திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்தலாம் என்றார். 

    • பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பையனூர் சிப்காட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலையை நேரில் சென்று திறந்து வைத்தார்.

    பின்னர் இந்த தொழிற் சாலையை பார்வையிட்ட அவர் அங்கு பணிபுரியும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் வழி நெடுக பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தி.மு.க. கொடி வைக்கப்பட்டிருந்தது.

    கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் நின்று முதலமைசசர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

    • மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல், தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • யானைக்கு ஷவர் குளிர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. சென்னையில் வழக்கத்திற்கு மாறாக தற்போது இயல்பை விட 4.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர் வாகன ஓட்டிகள் வெப்பத்தால் தவிக்கும் நிலை உள்ளது.

    நேற்று மீனம்பாக்கத்தில் 99.86 டிகிரி(37.7டிகிரி செல்சியஸ்) பதிவாகி உள்ளது. இது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து மார்ச் மாதத்தில் பதிவான பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்றும்,கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகம் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழகத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பறவை கூண்டுகளின் மேல் சாக்குபையால் போர்த்தி அடிக்கடி தண்ணீர் தெளிப்பது, மற்று விலங்குகள் உள்ள பகுதியில் குட்டைகளில் தண்ணீர் வற்றாமல் பார்த்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல், தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் விலங்குளுக்கு சூட்டைத் தணிக்கக்கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் அடிக்கடி வழங்கவும் முடிவு செய்து உள்ளனர். யானைக்கு ஷவர் குளிர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    புலிகள் நீந்தி குளிக்க தொட்டி , காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியல், அதன் இருப்பிடத்தை சுற்றி தண்ணீரை எப்பொழுதும் சேற்றுத்தன்மையுடன் வைக்கவும் ஏற்பாடு செய்து உள்ளனர். நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளின் மீது காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்படுகிறது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    எனினும் கிளாம்பாக்கத்திற்கு சென்று வருவதில் பயணிகளுக்கு உள்ள சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது.

    கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது.

    ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே புதிய ரெயில் நிலைய பணி வருகிற மே மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையப்பணியில் 50 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டது. வருகிற மே மாதத்திற்குள் முழு பணியையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது என்றார்.

    இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இந்த பணியும் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வர முடியும்.

    • 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
    • நாளைய கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுத்து வருகி றார்.

    இதற்காக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் கைகோர்த்துள்ளார். அவர் ஏற்கனவே சென்னை வந்து இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நாளை நடைபெறுகிறது. அங்குள்ள 'கான்புளுயுன்ஸ்' ஓட்டலில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் விஜய் பங்கேற்று பேசுகிறார்.

    அப்போது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளையும் வெளிடுகிறார்.

    இந்த கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதனால் நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக வெற்றிக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி நிர்வாகிகளுடன் புதிதாக போடப் பட்ட 28 அணிகளின் நிர்வாகிகளும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்காக 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்கனவே சென்னைக்கு வந்து விட்டனர். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கான அனுமதி சீட்டை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட கட்சி நிர்வாகிகள் மாமல்லபுரத்துக்கு நேற்றே சென்று விட்டனர்.

    இவர்களின் வசதிக்காக திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கி கொடுக் கப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை துபாயை சேர்ந்த பாதுகாவலர்கள் 300 பேர் மேற்கொண்டு உள்ளனர்.

    அவர்கள் கூட்டம் நடக்கும் அரங்கத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    விஜய் மற்றும் முன்னணி நிர்வாகிகள் செல்வதற்கு தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விஜய் செல்லும் வழியில் யாரும் நுழைந்து விடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    தொடக்க விழாவை யொட்டி சிறப்பு சைவ விருந்துக்கு விஜய் ஏற்பாடு செய்துள்ளார். 17 வகையான அறுசுவை உணவு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது.

    தொடக்க விழாவை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப் பட்ட 18 பேர் கொண்ட குழுவும் விழாவுக்கான ஏற்பாடுகளை பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றிய முக்கிய அறிவிப்பையும் நாளைய கூட்டத்தின் போது விஜய் வெளியிடுகிறார்.

    விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    2-ம் ஆண்டு தொடக்க விழாவிலும் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அரசியல் களத்தில் மீண்டும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளைய கூட்டத்தில் பங்கேற்கும் விஜய்க்கு சிறப்பான வரவேற்பை அளிப்பதற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மயிலாட்டம், ஒயிலாட்டம் மூலமாக வழிநெடுக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிராக களம் கண்டுள்ள அவர் புதிய கூட்டணியை அமைத்து வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

    இது தொடர்பாகவும் நாளைய கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்துகிறார். தனது பேச்சின் போது கூட்டணி அரசியல் பற்றி விஜய் மீண்டும் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டம் நடைபெறும் ஓட்டலின் நுழைவு வாயிலில் வேலுநாச்சியார், காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மையார் படங்களுடன் விஜய்யும் இருப்பது போன்ற 'கட்அவுட்' வைக்கப்பட்டு உள்ளது.

    விழா நடைபெறும் அரங்கம் அருகே 500-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிர முகர்கள் வருகை தருவதால் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத் தலைமையில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் அரங்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தனியார் பாதுகாவலர்களுடன் சென்று ஆய்வு செய்ததுடன் விழாவுக்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறார்.

    • மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
    • கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர்.

    செங்கல்பட்டு:

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 22-ந்தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர். 

    • 7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
    • 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது.

    7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. 2-வது அலகில் மட்டும் மின்உற்பத்தி நடந்து வந்தது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த அலகில் 220 மெகாவாட் மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ந்தேதி 2-வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்" என்றனர்.

    • வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக காலையில் பனி மூட்டத்துடன் மழை பெய்வது போன்று பனித்துளி பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர்.

    மதியம் ஆனதும் வழக்கம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.

    இந்த காலநிலை மாற்றத்தால் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு செல்ல சிரமமாக உள்ளதாகவும், மீன்களின் வரத்தும் கடலில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் இடம், வாகன நிறுத்தும் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து செல்லும் வண்ணம் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ×