என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் துணிகர கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
    X

    சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் துணிகர கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    • மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வடமலாபுரம் தாயில்பட்டி ரோட்டில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்த ர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் இரவு பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் கருவறையில் இருந்த 4 குத்து விளக்குகள், ஆம்பிளி பயர், யூபிஎஸ் பேட்டரி, தண்ணீர் மோட்டார், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×