search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோவில் எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டுகள் சிறை
    X

    போக்சோவில் எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டுகள் சிறை

    • போக்சோவில் எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன
    • பாலியல் வழக்கில் கைதானவர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமழபாடி கீழத் தெருவை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது42). தனியார் சிமெண்ட் ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு அருண்ராஜ் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமானூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அருண்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×