என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
- உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
- கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டது
அரியலூர்:
உலக சுற்றுலா தினத்தையொட்டி அரியலூரில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே சுற்றுலா சார்ந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர் சரவணன், இளநிலை பயிற்சி அலுவலர் ரவி மற்றும் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






