என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்கள் பேரணி
    X

    அரசு பள்ளி மாணவர்கள் பேரணி

    • அரசு பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது
    • மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு

    அரியலூர்

    வரும் 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட இருப்பதை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழகொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்று, வீதிகளில் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், மாற்றுத்திறனாளி உடன் நட்புறவு பாராட்டுவோம், இணைவோம் மகிழ்வோம் என்ற பதாதைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வீதிகளில் பேரணியாக கோசமிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா தலைமைவகித்தார். ஊராட்சி மன்ற தலைவி செந்தமிழ்ச்செல்வி முன்னிலைவகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வி, அரசு மருத்துவ ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் அரசி, ராதை ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×