என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஓட்டல் ஊழியர் மர்மமான முறையில் சாவு
Byமாலை மலர்29 Oct 2022 9:55 AM GMT
- ஓட்டல் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
- நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் ராஜதுரை(வயது 22). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று விடுப்பு எடுப்பதாக ஓட்டலுக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள வாடகை வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தங்கி இருந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நேற்று மாலை அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து, கதவை திறந்து பார்த்தனர். அப்போது ராஜதுரை பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X