search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
    X

    காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

    • அரியலூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது
    • அலுவலகங்கள் காலியாக கிடந்ததால், பணிகள் பெரும்பாலும் முடங்கின

    அரியலூர்,

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிப்புரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் கணினி உதவியாளர் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரியகாலத்தில் வழங்க வேண்டும்ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.இதனால் அரியலூர், திருமானூர், செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் 80 சதவீத பணியாளர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் காலியாக கிடந்தது. பணிகள் பெரும்பாலும் முடங்கின.

    Next Story
    ×