என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
- அரியலூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது
- அலுவலகங்கள் காலியாக கிடந்ததால், பணிகள் பெரும்பாலும் முடங்கின
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிப்புரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் கணினி உதவியாளர் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரியகாலத்தில் வழங்க வேண்டும்ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.இதனால் அரியலூர், திருமானூர், செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் 80 சதவீத பணியாளர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் காலியாக கிடந்தது. பணிகள் பெரும்பாலும் முடங்கின.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்