search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகத்திற்கு மஞ்சள் பை விருது-அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி அழைப்பு
    X

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகத்திற்கு மஞ்சள் பை விருது-அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி அழைப்பு

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகத்திற்கு மஞ்சள் பை விருது வழங்கபடும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரித்துள்ளார்
    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்க் தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாரம்பரிய பயன்பாட்டை ஊக்குவித்த சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த 3 பள்ளிகள், சிறந்த 3 கல்லூரிகள் மற்றும் சிறந்த 3 வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் இரண்டை மாவட்ட ஆட்சியரிடம் மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×