search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆயுதபூஜை தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,715 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    ஆயுதபூஜை தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,715 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • 9-ந் தேதி 225 பஸ்களும், 10-ந் தேதி 880 பஸ்களும் இயக்க திட்டம்.
    • அரசு விரைவு போக்குவரத்துக் கழக அறிவிப்பு.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 9-ந் தேதி (புதன்கிழமை) 225 பஸ்களும், 10-ந் தேதி (வியாழக்கிழமை) 880 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 9-ந் தேதி (புதன்கிழமை) 35 பஸ்களும், 10-ந் தேதி (வியாழக்கிழமை) 265 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதி ஆகிய 2 நாட்களும் 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×