search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் மீது சரமாரி தாக்குதல்
    X

    ராஜபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் மீது சரமாரி தாக்குதல்

    • குருமூர்த்தியிடம் சிலர் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டனர்.
    • தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 48). இவர் ராஜபாளையத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

    மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளராகவும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    குருமூர்த்தி தனது அலுவலகத்தை ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் காம்ப்ளக்சில் அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார்.

    இதற்கிடையே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு வரும் நபர்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக குருமூர்த்திக்கும், மற்ற பயிற்சி பள்ளிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது. சிலர் குருமூர்த்தியிடம் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பயிற்சி பள்ளியை சேர்ந்த வேல்முருகன் உள் பட 6 பேர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் குருமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் குருமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர் கள் அங்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக் டர் பவுல் ஏசுதாஸ், பலத்த காயம் அடைந்த குருமூர்த் தியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் குருமூர்த்தி தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தலைமறைவான வேல்முருகன் உள்பட 6 பேர் கும்பலையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளைத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×