search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூரில் பா.ஜ.க. மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை
    X

    திருப்பூரில் பா.ஜ.க. மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை

    • சட்டமன்ற தேர்தல்-கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை.
    • தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவ ராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாவிட்டாலும் பல இடங்களில் 2-வது இடத்தை பிடித்ததுடன், வாக்கு சதவீதமும் அதிகரித்தது. இது அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என பா.ஜ.க., நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக அடுத்த மாதம் செப்டம்பர் 1-ந்தேதி லண்டன் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

    இதற்கான ஆலோசனை கூட்டம் திருப்பூர் பெருமாநல்லூரில் உள்ள கிருஷ்ணா மகாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக பா.ஜ.க., மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், எம்.எல்.ஏ.க்கள் காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் 66 மாவட்ட தலைவர்கள் , மண்டல தலைவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நவம்பர் மாதத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான பணிகளை தொடங்குதல், கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குதல் , கட்சி வளர்ச்சி, சுதந்திர தின கொண்டாட்டம், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடத்தில் எடுத்து செல்வது, சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் வெற்றி பெற வியூகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் லண்டன் செல்லும் அண்ணாமலை அங்கு 3 மாதம் வரை தங்கி படிக்க உள்ளதால் அதன்பிறகான கட்சி ப்பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள ப்பட்டது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்க ப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி அண்ணாமலை தலைமை யில் திருப்பூர் குமரன் சிலை முன்பு இருந்து தொடங்கி காந்திநகரில் உள்ள காந்தி அஸ்தி நினைவிடம் வரை தேசிய கொடிகளுடன் இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த ஊர்வலத்துக்கு திருப்பூர் வடக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து திருப்பூரில் உள்ள குமரன் சிலைக்கு பா.ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா, மாநிலச் செயலாளர் மலர்கொடி மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றனர். அங்கு வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பும் அளித்தனர்.

    Next Story
    ×