search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே பஸ் மீது கார் மோதல்:   5 பேர் படுகாயம்
    X

    செஞ்சி அருகே பஸ் மீது கார் மோதல்: 5 பேர் படுகாயம்

    • திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த கார் பஸ் மீது மோதியது.
    • இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் கடலாடி குளம் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே திருவண்ணா மலை யில் இருந்து செஞ்சி நோக்கி வந்த கார் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்த சிவபெருமான் மகன் கல்விக்கரசன் (வயது 26) சிவபெருமான் மனைவி ஆதிலட்சுமி வயது( 50), அன்பரசன் மகன் தனிய ரசன் (வயது 30)மண்ணாங் கட்டி மகன் செல்வகுமார் (வயது 43) செல்வகுமார் மனைவி கவுசல்யா (வயது 35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்தவர்கள் திருவண்ணா மலையில் கிரிவலம் முடித்துக் கொண்டு மீண்டும் புதுவைக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகி றார்கள்.

    Next Story
    ×