search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையத்தில் சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி பலி
    X

    கோபிசெட்டிபாளையத்தில் சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி பலி

    • சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன் புதூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (55). இவரது மகன் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அர்ச்சுனன் தனது மகனை கல்லூரி செல்வதற்காக பஜனைகோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

    பஸ்சில் அவரது மகன் ஏறியதும், அர்ச்சுனன் வீடு செல்வதற்காக கோபி-ஈரோடு சாலையை கடந்த போது, அந்த வழியாக வந்த நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டிச்சென்ற பைக் அர்ச்சுனன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சேகர் மற்றும் அர்ச்சனனை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சேகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அர்ச்சுனன் சாலையை கடப்பதும், அப்போது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×