search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி -வாசுதேவநல்லூர் பகுதியில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
    X

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

    சிவகிரி -வாசுதேவநல்லூர் பகுதியில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

    • கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முத்துலட்சுமி, சுமதி, தங்கராசு, தங்கேஸ்வரன், அவைத் தலைவர் துரைராஜ், துணை செயலாளர் முனியாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி கார்த்திக், ஆனந்தா ஆறுமுகம், புல்லட் கணேசன், இளையராஜா, சி.எஸ். மணி, வாசு. பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிக்கந்தர் பாபு, குட்டியப்பன், மாரிமுத்து, கட்டபொம்மன், பாண்டி, முருகன், சுந்தர், மாரியப்பன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×