என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செஞ்சியில் சமுதாய வளைகாப்பு விழா: பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்-அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
- டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் சமூகநலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செஞ்சி வட்டாரத்தின் சார்பில் சமுதாய வளை காப்பு விழா செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செய லாளர்கள் விஜயராக வன், பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோக பிரியா, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,செஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செய லாளர் கார்த்திக், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையா ளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்