என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கடலூர் பா.ம.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற 4 பேர் சிக்கினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சங்கர் (வயது 43). வன்னியர் சங்க முன்னாள் நகர தலைவரான சங்கர், பா.ம.க. பிரமுகராக உள்ளார். நேற்று மதியம் சங்கர், தனது மனைவி தனலட்சுமியுடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்டமர்மகும்பல் அங்கு வந்தது.பின்னர் அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கண் முன்னே தனது கணவரை மர்மகும்பல் வெட்டியதால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கதறி அழுதார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் எஸ்.என்.சாவடியை சோந்த் மகாலிங்கம் மகன்கள் சங்கா், விஜய், பிரபு ஆகியோருக்கும் அதே பகுதியை சோ்ந்த தங்கபாண்டியன், சதிஷ், வெங்கடேசன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன்காரணமாக சங்காின் தம்பி பிரபுவை (35) சதிஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கடந்த 28.2.2021 அன்று தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.
இந்த வழக்கில் சங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவா் மீது விரோதம் கொண்ட சதிஷ், வெங்கடேசன் உள்ளிட்டோா் சங்கரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சங்கரை அரிவாளால் வெட்டியவர்கள் மோட்டார் சை்ககிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து தற்போது 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்