search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பழுதடைந்த ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் சாவு
    X

    பழைய பல்லகச்சேரி கிராமத்தில் ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்ததில் மாடு இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    பழுதடைந்த ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் சாவு

    • பழுதடைந்த ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் இறந்து கிடந்தன.
    • நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பழைய பல்லகச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே ரேஷன் கடை கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அகற்றப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ரேஷன் கடை அருகே கட்டப்பட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 65) என்பவரின் நான்கு பசுமாடுகள் மீது விழுந்ததில் மாடுகள் சம்பவ இடத்தில் இறந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பசு மாடுகளை மீட்டனர். பழுதடைந்த ரேஷன் கடை இடிந்து விழுந்து நான்கு மாடுகள் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×