என் மலர்
உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபைக்கு வரவில்லை
- தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தினமும் பங்கேற்று வந்தனர்.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபை கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தினமும் பங்கேற்று வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்று விவாதத்தில் பங்கேற்றனர்.
இன்று கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். ஆனால் இன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அவர் சேலம் சென்றுவிட்டார். இதே போல் ஓ.பன்னீர்செல்வமும் இன்று சட்டசபைக்கு வரவில்லை. அவர் தேனிக்கு சென்றுவிட்டார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
Next Story






