என் மலர்
ஈரோடு
- மக்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வாய்ப்பாக இருக்கும்.
கோபி:
கோபி கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்தித்தபோது 10 நாட்கள் கெடு என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் அமைப்புச்செயலாளர் பதவியும், அவர் வசித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் வழங்கினர். இந்த கடிதங்கள் அனைத்தும் பெறப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அ.தி.மு.க நூறாண்டுகள் ஆட்சியில் இருக்கும் என சட்டமன்றத்தில் சூழலை ஏற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.
அதே போல அ.தி.மு.க. தொண்டர்கள், மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரலை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாக அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்ட காரணமாக கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.
மக்கள் எண்ணம் நிறைவேற வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்றால்தான் அனைவருக்கும் மரியாதை. அப்போதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வாய்ப்பாக இருக்கும். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்திற்காக பாடுபடுவோம் அதுவே நம் லட்சியம், என்றார் .
அதைத் தொடர்ந்து அவர் தனது வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சத்தியபாமாவின் மகளிர் அணி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
- ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
- வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார்.
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று முன்தினம் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் பங்கேற்க மாட்டேன்' என்றார். இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் வரும் 9-ந்தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.
கோபி:
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர்.
* அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வை தான் நான் வெளிப்படுத்தினேன்.
* அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து என்னை நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
* என்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்கியுள்ளனர்.
* கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
* காலில் விழுகிறோம் என கூறியவர்களையே ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.
* என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
* கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.
* ஒன்றிணைந்தால் சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
* அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை யார் தான் வெளிப்படுத்துவது? என வினா எழுப்பினார்.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல் அவரது ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது.
- விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்று அங்கு கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சில சமயம் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதனால் லாரியில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் டிரைவர்கள் கரும்புகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக லாரி சுற்றிலும் தார்ப்பாயை போட்டு மூடி வருகின்றனர். இருந்தாலும் கரும்பின் வாசனையை பிடித்து அந்த லாரிகளை யானைகள் வழிமறிப்பது நடந்து வருகிறது.
நேற்று தாளவாடி அடுத்த அரேப்பாளையம் பிரிவில் ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி கரும்பு பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
கரும்பை சுற்றியும் வெள்ளை கலர் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. எனினும் கரும்பு வாசனையை பிடித்த அந்த ஒற்றை யானை அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி தார்பாயை தும்பிக்கையால் பிரித்து தூர எறிந்து கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு ருசித்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு யானை அந்த இடத்தை விட்டு சென்றதும் போக்குவரத்து சீரானது.
இதேபோல் நேற்று இரவு தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்தது. அங்கு தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக இரவு நேர தூக்கத்தை தொலைத்து கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
- வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது.
- ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும்.
கோபி:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* 2024-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வென்றிருக்க முடியும்.
* அ.தி.மு.க.வில் தொய்வு உள்ளது, பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம்.
* நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் ஆகியோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறினோம்.
* வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது.
*அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள், நிபந்தனை இல்லாமல் மீண்டும் வர தயார் என கூறுகிறார்கள்.
* எந்த பொறுப்பும் தேவையில்லை என கூறுபவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும்.
* பிரிந்த தலைவர்களை இணைக்கவில்லை என்றால் நாங்கள் அந்தப் பணிகளை மேற்கொள்வோம்.
* யார், யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்து கொள்ளலாம்.
* என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன், இது நடக்கவில்லை என்றால் நாங்கள் முயற்சி செய்வோம்.
* 10 நாட்களில் முயற்சி எடுக்கவில்லை என்றால், இதே மனநிலையில் உள்ளவர்களை திரட்டி முயற்சி மேற்கொள்வோம்.
* அ.தி.மு.க.வுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
* எங்களுடைய கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது ஆசை.
* ஜெயலலிதா கூறியது போல் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பதற்கான பணியை தொடங்கியுள்ளோம்.
* நிறைவேற்றவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.
* உங்களை மீண்டும் அமைச்சர் ஆக்கியது எடப்பாடி பழனிசாமி தானே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், தன்னைப் போல் 2009-ல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
* பிரிந்து சென்ற தலைவர்களை சந்தித்து பேசி விட்டீர்களா? என்ற கேள்விக்கு அது சஸ்பெண்ஸ் என கூறினார்.
- யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
- ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இது முக்கியமான நேரம், அமைதி காக்குமாறு கூறி பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
* கடந்த 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க.
* கிளைக் கழக செயலாளராக எனது பணியை அ.தி.மு.க. வில் தொடங்கினேன்.
* செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பொதுமக்கள், தொண்டர்களுடன் உரையாற்றுவேன்.
* மக்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும் தலைவர் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
* என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர்.சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* சத்யா ஸ்டூடியோவுக்கு என்னை அழைத்து மனதார பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.
* சத்தியமங்கலத்தில் என்னை போட்டியிடுமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.
* என்னுடைய பெயரை சொன்னால் மட்டும் போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். கூறினார்.
* இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்றவர் எம்.ஜி.ஆர்.
* யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
* ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.
* திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் ததலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.
* ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்கு சோதனை வந்த போது அனைவரும் சேர்ந்து சசிகலாவை அழைத்தோம்.
* சசிகலாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியை நியமித்தோம்.
* எனக்கு 2 வாய்ப்புகள் இருந்தபோதும் இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்
* அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறேன்.
* 2016-க்கு பின் தேர்தல் களம் போராட்டக்களம் ஆகி விட்டது என்பதை நாம் அறிவோம்.
* 2019, 2021, 2024 உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த போது களத்தில் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.
முன்னதாக, கோபியில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் செங்கோட்டையன் ரோடுஷோ நடத்தினார்.
- திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அ.தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கே.ஏ. செங்கோட்டையன் 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போவதாக கூறியுள்ளாரே? என கேள்வி கேட்டபோது, செங்கோட்டையன் 5-ந்தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறுவார் என பார்ப்போம் என தெரிவித்து விட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து திருமண விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் நிருபர்கள், நீங்கள் சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் 5-ந்தேதி பதில் கூறுகிறேன் என தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜய குமாரும், செங்கோட்டையனுடன் முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் அரைமணி நேர இடைவெளியில் ஒருவரை ஒருவர் சந்திக்காத வண்ணம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றனர்.
- தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன்.
- நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை.
கோபி:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
கட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் வரும் 5-ந் தேதி மனம் திறந்து பேசுகிறேன். முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என செங்கோட்டையன் கூறினார்.
இதனால் அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 5-ந் தேதி செங்கோட்டையன் எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடுவார் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பண்ணாரி, 16 ஒன்றிய செயலாளர்கள், 13 பேரூர் கழகச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களை சந்தித்த செங்கோட்டையன், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறி சென்றார்.
இந்நிலையில் இன்று காலை செங்கோட்டையன் தோட்ட வீட்டிற்கு முன்னாள் எம்.பி. சத்திய பாமா வந்து செங்கோட்டையனை சந்தித்து பேசினார். நாளை மறுநாள் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தோட்டத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது செங்கோட்டையனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது செங்கோட்டையன் கூறும் போது,
செப்டம்பர் 5-ந்தேதி கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன். அன்றைய தினம் மனம் திறந்து விளக்கமாக பேசுகிறேன்.
என்னுடைய கருத்தை தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்க போகிறேன். இன்றைய தினம் எந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை. தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றார்.
அப்போது நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கூடுவதாக தகவல் வந்துள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய செங்கோட்டையன், 5-ந் தேதி அது உங்களுக்கே தெரியும்.
நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை. அவர்களாகவே வந்தனர் என்று கூறி காரில் கிளம்பி சென்றார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
- வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்து உள்ளது.
திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 27 -வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை படுத்து இருந்தது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் முடிந்த அளவு இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றனர்.
- ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.
- மனம் திறந்து பேசப்போகிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், வருகிற 5-ந்தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ன கருத்து சொல்லப்போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம், அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.
- செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
- தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.
கோபி:
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.
மீண்டும் 2011 ஆம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். அதை த்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
இப்படி அ.தி.மு.க.வின் மிக முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார்.
இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார்.
ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கிய போது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.
கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம் வரும் 5-ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார்.
மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2, 3 மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாட்டால் அ.தி.மு.க.வில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது. அவர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் வந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர்.
- தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி ரகங்கள் சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டு துணிகள் வீரப்பனை செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர். ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதை ஏற்றுமதி துணிகள் என ஏமாற்றுவதாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துணிகள் விற்பனை நிறுத்தப்பப்பட்டது.






