search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே தவறான சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
    X

    கடையநல்லூர் அருகே தவறான சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

    • 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.
    • மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை கோவில் அடிவாரப் பகுதியில் தனியார் தோட் டத்தின் காவலாளியாக இருப்பவர்கள் பரமசிவன்-காளியம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் கவுசிக்(வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

    கடந்த 7-ந்தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கவுசிக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை உறவினர் பூவையா அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுவனுக்கு தலைப்பகுதியில் சுத்தம் செய்யாமல் 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.

    இதன் தொடர்ச்சியாக மறுநாள் கடுமையான வலியில் துடித்த சிறுவனை அவரது தாய் காளியம்மாள் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தலையில் பட்ட காயத்திற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் தலையில் பட்ட காயத்தின் பகுதி புண் ஏற்பட்டு சீழ் வடிந்து பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது. சரியான நேரத்தில் சிறுவனை அழைத்து வந்ததால் அவரது தலையில் இருந்த மண் உள்ளிட்டவைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு மறு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அவரது தாயார் தெரிவிக்கும்போது, பண்பொழியில் உள்ள ஒரு மருத்துவமனையில் காயம்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யப்படாமல், வலிக்கு எந்த விதமான ஊசி உள்ளிட்டவைகள் செலுத்தாமல், முறையான சிகிச்சை அளிக்காமல் அவசர கதியில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரது உத்தரவுப்படி நேற்று இரவு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரேம லதா தலைமையில் மாவட்ட மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த மருத்துவமனையில் நெல்லையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பெயரில் போர்டு வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் அங்கு அவர் இல்லை.

    அவருக்கு பதிலாக மருத்துவமனை கட்டிடத்தின் உரிமையாளரான கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த அமீர் ஜலால் மருத்துவம் பார்த்து வருவதை கண்டு பிடித்தனர்.

    அப்போது மருத்துவ அதிகாரிகள் குழுவினர், அங்கு முதியவர் ஒருவருக்கு சிகிச்சையளித்ததையும் கண்டறிந்து அவர் மருத்து வம் படிக்காமல் மருத்துவம் பார்த்தத்தை அறிந்தனர்.

    தொடர்ந்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அளித்த புகாரை தொடர்ந்து அமீர் ஜலாலை கைது செய்தனர். விசாரணையில், அவர் மருத்துவம் படிக்காமல் 17 ஆண்டு காலமாக மருத்துவம் பார்த்தது தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×