என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே விவசாயி கொலை:2 பேர் சிறையில் அடைப்பு
- வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
- மாதையன், முருகனை 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி அருகே உள்ள புலிகரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 55). இவருடைய மனைவி கந்தம்மாள்.
இவர்களுக்கு பிரேம்கு மார் (30), ரஞ்சித்குமார் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி புலிகரை அருகே உள்ள தோட்டத்தில் கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கிருஷ்ணனின் 2 மகன்களே அவரை உறவினர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தி ருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணனின் மகன்களான பிரேம்குமார், ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொட ர்புடைய கிருஷ்ணனின் உறவினர்களான மாதையன் (42), முருகன் (40) ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் தருமபுரி அருகே பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர். இந்த கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி மாதையன், முருகனை 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்