search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் தீ விபத்து: 2 வீடுகள் எரிந்து நாசம்
    X

    காரைக்காலில் தீ விபத்து: 2 வீடுகள் எரிந்து நாசம்

    • காற்றின் வேகத்தால், பக்கத்தில் இருந்த ராஜேந்திரன் வீட்டிலும் தீ பரவியது.
    • 2 பேர் வீட்டிலும் இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

    புதுச்சேரி:

    காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் ரவி, இவரது சகோதரர் ராஜேந்திரன். 2 பேரும் தனி தனியே தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல், ரவி வசிக்கும் கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால், பக்கத்தில் இருந்த ராஜேந்திரன் வீட்டிலும் தீ பரவியது. இதனால், 2 பேரின் வீடும் தீயில் எரிந்து சாம்பலானது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், காரை க்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், தீயணை ப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மற்ற வீடு களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இருந்தும், 2 பேர் வீட்டிலும் இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இந்த தீ விபத்தில், இருவர் வீட்டின் அருகே இருந்த மணிவாசகம் என்பவர் வைக்கோல் போரிலும் தீ பிடித்ததால் வைக்கோல்கள் கருகியது. தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×