search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பிற்குதிருப்பூர் கல்லூரி மாணவர் தேர்வு
    X

    சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பிற்குதிருப்பூர் கல்லூரி மாணவர் தேர்வு

    • முதல் இரண்டு வருடங்கள் புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி துவங்கி 56 வருடங்கள் ஆகிறது. நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருந்து யாரும் புதுடில்லி மற்றும் சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கு தேர்வாகவில்லை. ஆனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2வில் இருந்து குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வாகி வருகிறார்கள். முதல் இரண்டு வருடங்கள் புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    இந்த வருடம் (2023) சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகளிலிருந்து 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து 9 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் அரவிந்தன் (மூன்றாமாண்டு விலங்கியல்) தேர்வாகி உள்ளார். இது ஹாட்ரிக் சாதனையாக உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×