search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் 450 வரை விற்பனையானது.
    • சந்தையில் ஆடுகள் கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    காரிமங்கலம்,

    காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வார சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகள் காய்கறிகளுடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் கால்நடைகள் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும்.

    இந்த வாரசந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வந்து கால்நடைகள் மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கி செல்வார்கள். நாளை யுகாதி பண்டிகை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் கொண்டா டி வருகின்றனர்.

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு கிராம புரத்தில் உள்ள மக்கள் கறி விருந்துக்கு ஆடு கோடிகளை பழியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கறிவிருந்து வைப்பது வழக்கம். இந்த நிலையில் காரிமங்கலத்தில் இன்று வாரச்சந்தை கூடியது. நாளை யுகாதி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் ஆடுகள் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு எடைக்கு ஏற்றவாறு 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை விற்பனையானது. எடைக்கேற்ப அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை செய்யட்டு சுமார் 2ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

    இதே போல் நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் 450 வரை விற்பனையானது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனையானது. இந்த ஆடுகள் கோழிகளை வியாபாரிகள் பொதுமக்கள் என போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் ஆடுகள் கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஆடுகள் கோழிகள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரிமங்கலம் வாரச் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×