search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் ஆர்.என்.ரவி இன்று நாகை பயணம்
    X

    கவர்னர் ஆர்.என்.ரவி இன்று நாகை பயணம்

    • உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
    • மீன்வள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளி உப்பு சத்தியாகிரக நினைவிட நிகழ்ச்சி, மீன்வள பல்கலைக்கழக பட்டம்ளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாகை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் திருச்சி வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்படும் அவர் தஞ்சை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளிக்கு வருகிறார்.

    மாலை 5 மணியளவில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் நடக்கும் உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்குள்ள தனியார் ஹோட்டலில் இரவு தங்குகிறார்.

    தொடர்ந்து மறுநாள் (புதன் கிழமை) காலை வேளாங்கண்ணி பேராலயத்தில் பிரார்த்தனை செய்கிறார். 9.30 மணியளவில் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    கவர்னரின் 2 நாள் பயணத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப் பிரண்டுகள், 25 இன்ஸ்பெக் டர்கள் 6 வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் என மொத்தம் ஆயிரம் போலீசார் நாகை மாவட்டத்தில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    உப்பு சத்தியாகிரக நிகழ்ச்சி நடக்கும் அகஸ்தியன்பள்ளி, மீன்வளப் பல்கலைக்கழகம் உள்பட கவர்னர் கான்வாய் வரும் வழித்தடங்களில், பகு திகளில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    Next Story
    ×