search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பா.ஜ.க.வின் விசுவாசியாக கவர்னர் செயல்படுகிறார்-தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு
    X

    பா.ஜ.க.வின் விசுவாசியாக கவர்னர் செயல்படுகிறார்-தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு

    • திராவிட மாடல் தமிழகத்தை சீரழிக்க வில்லை.
    • திருமாவளவன் பேசிய கருத்தை தவறாக சித்தரித்து செய்தி வந்துள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை, மயிலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேனி எம்.பி. தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    திராவிட மாடல் தமிழகத்தை சீர்குலைத்ததாக கவர்னர் ரவி சென்னையில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். திராவிட மாடல் தமிழகத்தை சீரழிக்க வில்லை. அனைத்து தரப்பு மக்களையும் சீர்தூக்கி வருகிறது.

    சமீபத்தில் நடந்த புள்ளிவிபரத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளே இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளாக உள்ளது.

    இது ஒன்றே போதுமானது. ஆனால் கவர்னர் ரவி இதைப்பற்றி தெரியாமல் பா.ஜ.க.வின் விசுவாசியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    திருமாவளவன் பேசிய கருத்தை தவறாக சித்தரித்து செய்தி வந்துள்ளது. தலித் சமுதாய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதாக அவர் பேசியதை வெட்டி விட்டு அவர் பேசிய ஒரு வார்த்தையை மட்டும் வெளியிட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×