search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னையில் 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை மையம் தகவல்
    X

    சென்னையில் 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை மையம் தகவல்

    • சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 35.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பகல் வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    டானா சூறாவளி காரணமாக காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால் பகல் நேர வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புயல் காற்றின் திசையை வடகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாற்றியது, புயலைச் சுற்றி காற்று குவிந்ததால், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பகல் வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை காணப்படுகிறது.

    அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, சென்னையில் சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, கன்னியா குமரியில் பெய்த மழையின் தீவிரம் குறையும் என்றனர்.

    Next Story
    ×