என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் விடிய விடிய பலத்த மழை
- காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முதல் விடிய விடிய கொட்டிதீர்த்தது.
இந்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






