search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்களை விற்ற கணவன்-மனைவி கைது
    X

    அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்களை விற்ற கணவன்-மனைவி கைது

    • 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
    • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக ஊத்தங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது அங்கு உள்ள ஒரு பெட்டிக் கடையில் அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்களை அதிக விலையில் விற்பனை செய்த கருமாண்டபதி பகுதியை சேர்ந்த முருகேசன் (59), அவரது மனைவி குணா (54) என்பது தெரியவந்தது.

    உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×