search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

    • தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.
    • போலீசாரும், மாணவர்களும் சாலையில் புரண்டு உருண்டனர்.

    திருச்சி:

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநாடு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். திருநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், மாவட்ட செயலாளர் ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நீட் தேர்வு குளறு படிகளை சுட்டிக்காட்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர் சங்கத்தினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, மாணவர் சங்கத்தினர் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சூர்யா மற்றும் சிலர் அஞ்சல் அலுவலகம் முன்பு அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் கே.முருகவேல் தலைமை யிலான போலீசார் தடுப்புகளை தாண்ட முயன்ற மாணவர்களை இழுத்தனர். இதில் போலீசாரும், மாணவர்களும் சாலையில் புரண்டு உருண்டனர்.

    ஒரு மாணவர் தடுப்பு களை தாண்டி அஞ்சல் அலுவலக நுழைவாயில் கதவு மீது ஏற முயன்றார். அவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி வந்தனர்.

    பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு போலீசார் நான்கு மாணவிகள் உட்பட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×