என் மலர்
உள்ளூர் செய்திகள்
பிரபாகரன் எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது உண்மைதான்-சீமான்
- இந்தியாவில் ஏ.கே 74 துப்பாக்கியை சுட்ட முதல் ஆள் நான் தான்.
- மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சு மியை ஆதரித்து வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகு எங்கிலும் உரிமை இழந்து அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு. அதே போல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும் உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்த 14 ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள். நம் நிலத்தில் தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலை வாய்ப்பு இல்லை. நதிநீர் உரிமை பெற முடியவில்லை.
இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை. வேளாண்மை செய்ய முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இதனால் அதிகார வலிமை தான் என்று பேசி பேசி 36 லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் 3-வது கட்சியாக அங்கீகாரம் பெற்று நிற்பது தான் புரட்சி.
போராட வேண்டும், இல்லையென்றால் நீயும் நானும் பலிகடா தான். இதனால் போராடு. போராட்டத்தினால் பல மாற்றங்களை பெற்றுள்ளோம். போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது. மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.
ஒவ்வொருவரின் மனதில் மாற்றம் சிந்தனை வந்து விட்டால் மாற்றம் வந்து விடும். இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தந்துள்ளது. நாம் தமிழர் கட்சி பயம் என்பது இல்லை என்பதால் துணிந்து நிற்கி றோம்.
நாங்கள் வீரர்கள். அதனால் துணிந்து தனித்து நிற்கிறோம். நாங்கள் கையேந்தி வாக்கு கேட்பது உங்கள் இடத்தில். எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து வருகிறோம். இந்த நிலைமை எங்கள் பின்னால் வரும் பிள்ளைகளுக்கு இருக்க கூடாது என்பதற்காக வாக்கிற்கு ரூ.500, ரூ.1000-க்கு கையேந்த கூடாது என்று கத்திக் கொண்டு இருக்கிறோம்.
நானே பீகார், கர்நாடக, கேரளாவில் இருந்து வந்து இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை முதல்வ ராக்கி இருப்பார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியில் தான் தமிழன் தோற்று போய்விட்டான்.
ஆங்கிலம் அறிவு இல்லை, ஒரு மொழி. வெள்ளை என்பது அழகு இல்லை ஒரு நிறம், தமிழில் எல்லா சாமிகள் கருப்பு தான். முருகன் கருப்பாக தான் இருப்பான்.
பிறந்த நாட்டுக்காக பிரபாகரன் பின்னால் சென்று 50 ஆயிரம் பேர் இறந்தார்கள். பணத்தை கொடுத்து நீ பொருளை வாங்குவாய், நாங்கள் உயிரை கொடுத்து வாங்குவோம். பிரபாகரன் துப்பாக்கி ஆயுதம் தூக்கியது போல நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் வாக்கினை ஆயுதங்களை தூக்கி வெல்வோம்.
அப்போது சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவம் குறித்து பேசினார். சினிமாவில் என்கவுண்டர் செய்யுற இங்கே வந்து ஏன் தடுமாறுகிற என்று பிரபாகரன் என்னிடம் கேட்டார்.
அப்போது ஏ.கே 74 ரக துப்பாக்கி குறித்தும் அதன் செய்முறை குறித்தும் எனக்கு அவர் பயிற்சி அளித்தார். அப்போது ஏ.கே 74 துப்பாக்கி ரஷ்யா இடமும், நம்மிடம் (விடுதலை புலிகள்) தான் உள்ளது என்றார்.
அப்போது நான் ஏ.கே 74 துப்பாக்கியை அவரிடம் சுட்டு காண்பித்தேன். பிரபாகரன் எனக்கு துப்பாக்கி பயிற்சி அளித்தது உண்மை தான். இந்தியாவிலேயே ஏ.கே 74 ரக துப்பாக்கி சுட்ட முதல் ஆள் நான்தான். உங்களை மாதிரி பொய் சொல்லி பிழைப்பு செய்யவில்லை.
ஒருநாள் வரலாற்றில் வாழ்ந்தவர்களை உரிமையோடு பெருமையோடு நான் திட்டுவது போல நீ என்னை ஒரு நாள் திட்டுவதை கைவிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
நீ எனக்கு ஓட்டு போட்டு தான் ஆக வேண்டும், என க்கு உன்னை விட்டால் வேறு வழியில்லை, அதே போல எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டால் கடைசியில் பிரச்சனை என்றால் என்னிடம் தான் வரவேண்டும்.
தலை நிமிர்ந்து தமிழ் இனம் சிறந்து வாழ கடைசி விடுதலை அரசியல் விடுதலை தான் என்பதை சிந்தித்து மக்கள் மைக் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.