என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
    • வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மராப்டைப்பு ஏற்பட்டதால் நடனமாடிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜீவாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் கண் முழிக்காததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜீவாவை பரிசோததித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். நடனமாடிக்கொண்டு இருக்கும் போது பெண் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா திடீரென தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், பாடகர் வேல்முருகன் அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனம் ஆடும்படி அழைத்தார். அதன் அடிப்படையில் சென்ற ஜீவாவிற்கு இந்த சோகம் நேர்ந்ததாக தெரிவித்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர்.
    • கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அதே பகுதியில் பிரியாணி கடை வைத்து உள்ளார். இவரது மனைவி பவானி (39). இவரும் பிரியாணி கடையில் கணவனுக்கு உதவியாக இருந்து வந்தார்.

    அரிகிருஷ்ணன் பிரியாணி கடைக்கு இறைச்சி மற்றும் பொருட்கள் வாங்க அடிக்கடி மனைவி பவானியை கடையில் விட்டு சென்றார். அப்போது கடையில் வேலை பார்த்த மதன் குமார் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இதனை அறிந்த அரி கிருஷ்ணன் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தார். இதில் மனைவி பவானி, கள்ளக்காதலன் மதன் குமாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவானது. இதையடுத்து அரிகிருஷ்ணன் தனது மனைவி பவானியை கண்டித்து கடையில் வேலைபார்த்த மதன் குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று நிறுத்தி விட்டார்.

    இதனால் கள்ளகாதலர்கள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து தவிப்புக்குள்ளான பவானி கள்ளகாதலன் மதன்குமாருடன் சேர்ந்து இடையூறாக இருக்கும் கணவன் அரிகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக கள்ளகாதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலி படையினரைஅணுகி ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் முன்பணம் கொடுத்தனர். இதனை அறியாத அரிகிருஷ்ணன் வழக்கம்போல் மனைவியுடன் பேசியபடி பிரியாணி கடைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர். இதில் அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    அப்போது கூலி படையினர் அரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய போது, "உன் மனைவி கள்ளகாதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் கொடுத்து உள்ளார். நீ எங்களுக்கு ரூ.5லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்று மிரட்டி உள்ளனர்.

    இதனால் அதிர்ந்து போன அரிகிருஷ்ணன் இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்கு பதிவு செய்து அரிகிருஷ்ணனின் மனைவி பவானி, அவரது கள்ளக்காதலன் மதன்குமார் ஆகியோரை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூலிப் படையை ஏவி அரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து பவானி, கள்ளக்காதலன் மதன்குமார் மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின் படி கூலிப் படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டதை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களி டம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    அரிகிருஷ்ணனை கூலிப்படையினர் காரை ஏற்றி தீர்த்து கட்ட முயன்ற முதல் முயற்சி பலிக்காததால் அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி உள்ளனர். கொலை செய்து விட்டு கைதாகி சிறைக்கு செல்லாமல் அரிகிருஷ்ணனையே மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    அப்படி மிரட்டியபோது தான் மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றது அரிகிருஷ்ணனுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்ததால் மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினர் கூண்டோடு சிக்கிக் கொண்டனர்.

    கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?.
    • நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன்.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இன்று உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் இருக்கிறது.

    இந்த ஆட்சியில் நிறையும், குறையும் உள்ளது. சாலையில் வாக்கிங் செல்ல முடிகிறதா? செயின் பறிக்கிறது... தினசரி என்ன நடக்கிறது என்பதை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த நிலைமை மாற வேண்டும். சட்டம் ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திருட்டுகள், கொலைகள் நடக்காது.

    ஆணவக் கொலைகள், லாக்அப் கொலைகள். விசாரணை என்று அழைத்துச் சென்று அடித்து கொல்கிறார்கள். இதெல்லாம் மனசுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதெல்லாம் மாற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டம்- ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதை சரி செய்ய வேண்டும் என இந்த பத்திரிகையாளர்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

    திமுக அரசுக்கு மதிப்பெண் வழங்க இது என்ன தேர்வா (Exam)?. நிறையும், குறையும் சமமாக உள்ளது எனச் சொல்லிட்டேன். 50-க்கு 50 வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆணவக் கொலைக்கு அடிப்படையே ஜாதிதான். எத்தனை பெரியாரும், எத்தனை பாரதியாரும் வந்து சொன்னாலும் இங்கு ஜாதி வெறி இன்னும் மறையவில்லை. அந்த ஜாதி வன்மம்தான் கொலை வரைக்கு செல்கிறது. ஒட்டுமொத்த மக்களின் மனநிலை மாறினால்தான் இது மாறும்.

    இவ்வாறு பிரேமலதாக கூறினார். 

    • டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி.

    குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

    டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் அறிவிப்பதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். 

    • சவுந்தர்யா, தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு, நெருக்கமாக ஆண் நண்பருடன் பழகி வந்ததாக தெரிகிறது.
    • இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் சவுந்தர்யாவை சந்திக்க தினேஷ் வந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் அருகே உள்ள கிறிஸ்துவகண்டிகை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் சவுந்தர்யா (வயது23). இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். சவுந்தர்யா தோழிகளுடன் அதே பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

    இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சவுந்தர்யா- தினேஷ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சவுந்தர்யாவுக்கு வேறொரு ஆண் நண்பருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேசுடன் பேசுவதை குறைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் விசாரித்த போது சவுந்தர்யா தன்னை விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதனை தினேஷ் கண்டித்து பலமுறை சவுந்தர்யாவை எச்சரித்தார். இருப்பினும் சவுந்தர்யா, தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு, நெருக்கமாக ஆண் நண்பருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் தினேஷ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சவுந்தர்யாவை சந்திக்க அவர் தங்கி இருந்த அறைக்கு தினேஷ் வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து தினேஷ் சென்று விட்டார்.

    இதற்கிடையே இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் சவுந்தர்யாவை சந்திக்க தினேஷ் வந்தார். அப்போது அறையில் சவுந்தர்யா மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சவுந்தர்யாவை சரமாரியாக குத்தினார். இதில் வயிறு, முகம், கை, காலில் சரமாரியாக காயம் அடைந்த சவுந்தர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சவுந்தர்யா கொலைசெய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய காதலன் தினேஷ் அவரது சொந்த ஊருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

    சவுந்தர்யா கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் நெருங்கி பழகிய ஆண் நண்பரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.
    • சென்னையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்திற்கு 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் விஜயும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்ள உள்ளார்.

    மாநில அளவில் நடைபெறும் த.வெ.க.வின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்பதாலும், தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாலும் கட்சித் தொண்டர்கள் திரளாக அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து 5 வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் செல்வதற்கு அப்பகுதியில் தயாராக காத்திருந்தனர். அப்போது அவர்களை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

    சென்னையில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    • தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை
    • ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை

    வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ' வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
    • இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    பாதுகாப்பான, வசதியான பயணம் கிடைக்கும் என்பதால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் முதல் தேர்வு ரெயில் தான். வந்தே பாரத், ராஜ்தானி உள்ளிட்ட ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் கட்டணம் என்பது பிற போக்குவரத்துகளை விட குறைவுதான். எனவே அனைத்து தரப்பு மக்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.

    ரெயில் கட்டணத்தை பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை உயர்த்தப்பட்டது. அப்போது, மின்சார ரெயில்களுக்கு 2 பைசாவும், மெமு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 பைசாவும், ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கு 6 முதல் 10 பைசா வரையிலும் கட்டணம் உயர்ந்தது.

    இதையடுத்து, 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்ந்தது. ஏ.சி. வகுப்புகளில் ஏ.சி. சேர்கார், முதல் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு ஏ.சி. வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் வருகிற ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.



    அதே நேரம் புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா, நேற்று சென்னை வந்தார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் வந்தார். வழிநெடுகிலும் நடைபெறும் ரெயில்வே பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மந்திரி சோமண்ணா, இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரெயில் கட்டணம் பொது மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும். இது குறித்து விவாதம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அது தற்போது பரிசீலனையில் உள்ளது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத் பி.ஈர்யா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நோக்கியா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    ஸ்ரீபெரும்புதூர் கோட்டம், நோக்கியா துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (25-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சரோஜினி நகர், ராஜீவ் காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், பி.வி.எல்.நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம்,

    ஆதிகேசவ பெருமாள் நகர், செக்கடி, டி.எம்.ஏ.ரோடு, தாலுக்கா ஆபீஸ் சாலை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், காசா கிராண்ட், வி.ஆர்.பி. சத்திரம், போந்தூர் தேரேசாபுரம், பிள்ளைப் பாக்கம் கிராமம், குண்டுபேரம்பேடு, தத்தனூர், வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை ஸ்ரீபெரும்புதூர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • திருச்சியில் திருமாவளவனை வைகைச் செல்வன் சந்தித்து பேசியுள்ளார்.
    • சந்திப்பு குறித்து கேள்விக்கு திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது என பதில் அளித்தார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைகைச் செல்வனிடம், திருமாவளவன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகைச் செல்வன், "திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்துள்ளதாகவும் இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

    அந்த ஓட்டைக்காகத்தான் திருமாவளவனை சந்தித்தீர்களா? என்ற கேள்விக்கு, "இப்போது என்னால் இவ்வளவுதான் கூற முடியும். உங்களுக்கு நான் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறேன்" என பதில் அளித்தார்.

    மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அப்போது வைகைச் செல்வன் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார்.

    • பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும்.
    • சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸிற்கும் தெரியும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    * நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள்.

    * பா.ம.க.வை பலவீனப்படுத்த தி.மு.க. முயல்கிறது.

    * பா.ம.க. வை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் எடுபடாது.

    * பா.ம.க.வில் உள்ளவர்களும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    * பா.ம.க.விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்.

    * பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும்.

    * சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸிற்கும் தெரியும்.

    * நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் எனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்.

    * என் பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர்.

    * அமைதியாக இருப்பது எனது பலம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சல், திட்டம் என்னிடம் உள்ளது.

    * தி.மு.க. தான் பா.ம.க.வின் எதிரி, நமக்குள் பிரச்சனை வேண்டாம்.

    * அண்ணன் தம்பியாக இருக்கும் நமக்குள் குழப்பம் வேண்டாம்.

    * 4 ஆண்டுகளாக இடஒதுக்கீடு தருவதாக தி.மு.க. ஏமாற்றி கொண்டிருக்கிறது.

    * வன்னியர்களுக்கு மட்டும் பா.ம.க. இடஒதுக்கீடு கேட்கவில்லை.

    * வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு வன்னியர்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள்.

    * துப்பாக்கி கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டில் எங்கிருந்தது வந்தது? என கேள்வி எழுப்பினார். 

    • மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளனர்.
    • காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் ஒரு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர்.

    ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், மூன்று மாணவர்களுடன் சேர்ந்து 11ம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து களக்காட்டூர் பகுதியில் உள்ள வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    மூன்று மாணவர்களும் இந்த மாணவியை விட சிறிய வயது உடையவர்கள்.

    மாநகர காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் வாலிபர் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று உள்ளதாகவும் மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் வாலிபருக்கு இந்த பாலியல் வன்கொடுமையில் சம்பந்தமில்லை என்று பள்ளி மாணவி கூறியதாக தகவல் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×