search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வதிபுரம் பாலத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர் அடையாளம் தெரிந்தது
    X

    பார்வதிபுரம் பாலத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர் அடையாளம் தெரிந்தது

    • கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர்
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதி புரம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பார்சல் வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி யானார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் பலியா னவர் கருங்கல் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் (வயது 18) என்பது தெரிய வந்துள்ளது. பலியான பிரதீஸ் கருங்கலில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து விட்டு வீட்டிற்கு திருப்பும் போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    பலியான பிரதீஸ் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் வைக்கப் பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×