search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர்களுக்கு ரூ.3 கோடி கடனுதவி
    X

    ஆதிதிராவிடர்களுக்கு ரூ.3 கோடி கடனுதவி

    • 285 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,

    ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ) திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை கரூர் மாவட்டத்தில், 285 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவியும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 136 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,39 லட்சத்து,98 ஆயிரத்து,067 மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 115 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,17 லட்சத்து,69 ஆயிரத்து,654 மதிப்பிலான கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 34 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.81 லட்சத்து,60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 285 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்கள்.

    Next Story
    ×