search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொடக்க வேளாண்மை சங்கத்தில் 69-வது கூட்டுறவு வார விழா
    X

    தொடக்க வேளாண்மை சங்கத்தில் 69-வது கூட்டுறவு வார விழா

    • தொடக்க வேளாண்மை சங்கத்தில் 69-வது கூட்டுறவு வார விழா நடந்தது
    • மண்டல இணைப்பதிவாளர் தொடங்கிவைத்தார்

    கரூர்:

    தமிழகம் முழுவதும் 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ராஜாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 'மக்களுக்காக கூட்டுறவு, மக்களைத் தேடி கூட்டுறவு' நிகழ்ச்சியை மண்டல இணைப்பதிவாளர் ப.கந்தராஜா தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு கல்வி, தொழில்முறை மேலாண்மை மற்றும் புத்தாக்கப் பயிற்சி என்ற கருப்பொருளின் அடிப்படையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. பின்னர் இணைப்பதிவாளர் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்றும், விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்றும் தமிழ்நாடு அரசால் கூட்டுறவுத் துறை மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விரிவாக மக்களிடம் எடுத்துரைத்துத்தனர்.

    Next Story
    ×