search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது
    X

    சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது

    • சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    கரூர்

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் அழகுராம், சட்டம் -ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர், உதயகுமார் மற்றும் போலீசார், கரூர் டவுன், வாங்கல், வேலாயுதம் பாளையம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ராமசாமி, சிதம்பரம், செந்தில்குமார், ராஜ சேகர், தமிழரசன், ரமேஷ், அஜித் குமார், ரவி, ஜோதிமுருகன், ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிட மிருந்து, 158 மதுபாட்டில்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

    Next Story
    ×