search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
    X

    பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

    • பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
    • குளித்தலை எம்.எல்.ஏ.மாணிக்கம் வழங்கினார்

    கரூர்:

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது,

    அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிவாசல்களில் உள்ள 53 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையேற்று உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சந்தியா, கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் முருகன், குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி, துணை வட்டாட்சிய வைரப்பெருமாள், அரசு வழக்கறிஞர் சாகுல் ஹமீது, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம், நகர் மன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், நகர பொருளாளர் தமிழரசன், நகரத் துணை செயலாளர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி செந்தில்குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்த்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×