என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிவு நீர் வாய்கால்கள் தூர்வாரும் பணி
- கழிவு நீர் வாய்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது
- 9-வது வார்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் உள்ள குளத்து பாளையம், திட்ட சாலை, பெரியார் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, சந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவையால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் மழை நீர் வெளியேறியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை பார்வையிட்டு அதனை மாநகராட்சியின் சிறிய பொக்லைன் இயந்திரம் வரவழைத்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய்களை சரி செய்து கொடுத்த மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு க்கு நன்றி கூறினர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்