search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் காயம்
    X

    கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் காயம்

    • கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் காயமடைந்தார்
    • பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கொடையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் குட்கா பயன்படுத்தியதாகவும், இதை பார்த்த பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததால் கால் ம ற்றும் கையில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×