என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சாவு
- குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கரூர்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 27). கொத்தனார். இவருக்கு திருமணமாகி ஜோதி (27) என்ற மனைவியும், சிவானி (5), ரிதன்யா ஸ்ரீ (2) என 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் ஜோதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை ஜோதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் மயக்கமடைந்த ஜோதி முற்றிலும் சுயநினைவை இழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கணவர் முகேஷ்குமார் தனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்