என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதி பெண் பலி
    X

    பைக் மோதி பெண் பலி

    • பைக் மோதி பெண் பலியானார்
    • நடந்து சென்றபோது விபரீதம்

    கரூர்

    கரூர் மாவட்டம், முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பேச்சியம்மாள், (வயது50). கூலி தொழி லாளியான இவர், கரூர் உழவர் சந்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர், காத்தப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் ஓட்டி வந்த, பைக், பேச்சியம்மாள் மீது மோதியது.

    இதில், படுகாயமடைந்த பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×