என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவி கடத்தல்
- கடந்த 4-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடுதிரும்பவில்லை.
- அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நாச்சியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடுதிரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தாய் எனது மகளை கடத்தூர் பகுதியை சேர்ந்த விவேக் (வயது22) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






