search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
    X
    பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்.

    நீலகிரியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

    • இந்தியாவில் 150 வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் உள்ளன.
    • நீலநிற குறிஞ்சிப்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் குறிஞ்சி மலா்கள், தற்போது அதிகளவில் பூக்கத் தொடங்கி உள்ளன. ' ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா' தாவரவியல் பெயா் கொண்ட இத்தகைய மலர்களில் ஏறக்குறைய 200 வகைகள் உண்டு.

    இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் 150 வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட குறிஞ்சி மலர் வகைகள் தற்போது நீலகிரி, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் மட்டுமே பூத்து குலுங்கி வருகின்றன.

    மேலும் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலர்ச்செடிகள் வரை குறிஞ்சியில் ஏராளமான வகைகள் உண்டு.

    அவற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் 30 முதல் 60 செ.மீ. உயரமுடைய நீலக்குறிஞ்சி மலர்கள் தனித்துவமாக கருதப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகே எப்பநாடு, பிக்கமந்து, கொரனூா், எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நீலநிற குறிஞ்சிப்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

    மலைச்சரிவுகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிச்சி மலர் செடிகள் உள்ளன. ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகள் தற்போது பூத்து குலுங்க தொடங்கி உள்ளன.

    பச்சைப்பசேல் காடுகளில் நீல நிறத்தில் பூத்து குலுங்கு நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகளை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்த்து வியப்புடன் ரசித்து செல்கின்றனர். அவர்கள் பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி செடிகளுக்கு முன்பாக புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    மேலும் நீலகிரி மலைத்தொடரில் லட்சக்கணக்கில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளதால், அந்த பகுதிகளுக்கு தேனீக்கள் மற்றும் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    Next Story
    ×