search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு பேரூராட்சியில் பசுமை உரம் தயாரிப்பிற்க்கு உரிமம்
    X

    பாலக்கோடு பேரூராட்சியில் பசுமை உரம் தயாரிப்பிற்க்கு உரிமம்

    • பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடைப்பெற்றது.
    • 100 சதவீதம் குப்பைகளை பிரித்து வழங்க மன்ற உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையாய கடமையாக செய்ய வலியுறுத்தப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடைப்பெற்றது.

    செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.

    கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சியில் நடைப்பெற்று வரும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு 24 மணி நேரத்திற்க்கும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    புதிதாக தமிழக அரசால் தொடங்கப்பட்ட செழிப்பு என்ற பெயரில் பசுமை உரம் தயாரிப்பிற்கு உரிமம் பெறபட்டது குறித்து பாராட்டு தெரிவிக்க ப்பட்டது.

    திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் 100 சதவீதம் குப்பைகளை பிரித்து வழங்க மன்ற உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையாய கடமையாக செய்ய வலியுறுத்தப்பட்டது.

    குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவில் முடித்து தண்ணீர் விநியோகம் செய்யவும், மத்திய மாநில நிதியை பெற்று வளர்ச்சி பணிகள் செய்யவும், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய் பிரச்சனை, தெருக்களில் பழுதாகி உள்ள மின் விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×