என் மலர்
மதுரை
- குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
- தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
* போதை கலாச்சாரத்தால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை தடுக்க முதல்வர் முன்வரவில்லை.
* குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்ற செய்தி வேதனைக்கு ஆளாக்குகிறது.
* பள்ளியின் அருகிலேயே போதைப்பொருள் விற்பனை அதிகரித்த நிலையில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.
* போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில் சாதிய எண்ணங்களால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.
* தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது.
மதுரை:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது, நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். அனுமதி பெற்று குடியிருப்புகள் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். தி.மு.க. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
தி.மு.க. அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது?, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள்.
ஆனால், கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்பட தொடங்கி உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொரு வரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது. அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா? என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சனம் செய்தது.
ஆனால், தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மறைந்தும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா? என்றார்.
- போராட்டத்தை வீடியோ மூலமாக முழுமையாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.
- திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பேர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 3-ந்தேதி கோவில் நிர்வாகம் சார்பில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து இந்து அமைப்பினர் தடையை மீறி மலைக்கு செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து அனுமதி மறுத்தனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் மலைக்கு செல்லும் பாதைகளில் கடந் ஒரு வாரத்திற்கும் மேலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தும் வகையில் இன்று (சனிக்கிழமை) உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்குமாறு திருப்ப ரங்குன்றம் ஊர் மக்கள் சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு போராட்டத்திற்கு அனுமதி அளித்தது. மேலும் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கிராம மக்கள் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் அரசியல் பேசக்கூடாது, பக்தி பாடல்களை மட்டும் படிக்க வேண்டும்.
போராட்டத்தை வீடியோ மூலமாக முழுமையாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. இதனை தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணியளவில் தொடங்கியது. இதில் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தினர். முருகனின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. உண்ணாவிரதத்ததை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான்.
- மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மனு மீது ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை தொடங்கியது.
நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டுமெனில் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி மறுத்த நீதிபதிகள் அமைதியாக இருக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிலையில் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
தமிழக அரசு தரப்பு வாதத்தில்,
ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லா ஒருவர் தாக்கல் செய்த மனுவை பொதுநல வழக்கு போல் பாவித்து தனிநீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லாதவரின் மனுவை விசாரித்து அதன் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட இயலாது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான். 73 ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 1912-க்கு பின்னர் இருமுறை மதப்பிரச்சனை எழுந்துள்ளது.
இந்தாண்டு தனிநீதிபதி மலை மீது தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தபோது நிலவிய சீரற்ற நிலைமையை சீர் செய்யவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தனிநபர் தீபமேற்ற முடியாது. சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் அல்ல.
மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்பது அழுத்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.
உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் ஏற்றுவது வழக்கம். திருப்பரங்குன்றத்தில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற முடியும் என்று அரசு தரப்பில் விவாதம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் சர்வே நடத்தியதில் தீபத்தூண் தான் என உறுதி செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானவை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
- இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.
இந்நிலையில், மீண்டும் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரிய வந்தது
- இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது.
- எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது.
மதுரை:
மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை நடத்தி வருகிறேன். முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடினேன். நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால், நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமானது.
புதிதாக கட்சியை தொடங்கி உள்ள விஜய் பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டாரா? அல்லது போராட்டங்கள் நடத்தினாரா? தனிப்பட்ட முறையில் விஜயை நான் மதிக்கிறேன்.
யாரோடு கூட்டு சேர்த்தாலும் தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தமிழ் நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைக்கிறது. எந்த கால கட்டத்திலும் எந்த சக்தியும் இங்கு நுழைய முடியாது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தி.மு.க.வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கர்வத்தோடும், அகந்தையோடும் தி.மு.க.வை துடைத்தெறிவோம் என அமித்ஷா பேசுகிறார். 100 மடங்கு பலம் கொண்டவர்களால் கூட தி.மு.க.வை வீழ்த்த முடியவில்லை. அமித்ஷா நாவை அடக்கி பேச வேண்டும். கட்சிகளை விமர்சனம் செய்யும்போது மிக கவனத்துடன் பேச வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து பாஜக இந்தியாவை துண்டிக்க பார்க்கிறார்கள். இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது. தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு கூட கிடையாது. மீண்டும் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது. அதே எஸ்.ஐ.ஆரை வைத்து 65 லட்சம் வெளிமாநில வாக்குகள் தமிழ்நாட்டில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆசை, கனவு எனக்கு கிடையாது, நான் என்றும் முதல்வர் ஆவேன் என பேசியதில்லை. தி.மு.க.-த.வெ.க. இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களை போல் பேசி வருகிறார் விஜய். விஜயின் கனவு நினைவாகாது. காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய். ஆகாய வெளியில் மணக்கோட்டையை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது என தமிழக அரசு வாதிட்டது.
- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன் என்றார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், "மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது. கோர்ட் கூட சொல்லமுடியாது. தேவஸ்தானமே முடிவுசெய்ய இயலும். இதுகுறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்சனை வந்தால் கோர்ட்டை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், "திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து நடந்த விசாரணையின்போது திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில் வரும் 17-ம் தேதி தலைமைச் செயலாளர், மதுரை மாநகர டிஜிபி ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
- டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட முக்கிய கனிம தொகுதிகளில் ஏலம் விடுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடிதம் எழுதியதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு 2023-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் அவர் கோரியதாக குறிப்பிட்டது.
2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்திற்கு விடப்பட உள்ள 3 முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களை வழங்க கோரி தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. 2024 பிப்ரவரி 8-ந்தேதி அந்த விவரங்களை தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த கனிமத் தொகுதி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.
நவம்பர் 7-ந்தேதி, அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழியும் என்றும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நவம்பர் 29-ந்தேதி இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், பிரதமர் உடனே தலையிட்டு மத்திய அரசு வழங்கி உள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
டிசம்பர் 9-ந்தேதி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர், எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டிற்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது. நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

ஜனவரி 7-ந்தேதி டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
இதற்கிடையே, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது மத்திய இணைய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மக்கள் ஆனந்தமாக கொண்டாடினர். இது அரிட்டாபட்டி மக்களுக்கு மறக்க முடியாத வெற்றியாகும்.
இதுகுறித்து கூறிய அரிட்டாபட்டி மக்கள், "எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்திருக்கிறார்கள். அரிட்டாபட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினர். முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று, "இந்த விழா உங்களுக்கானது, மக்களுக்கான வெற்றி" என்று கூறி, மக்களுக்கு நன்றி தெரிவித்து, திட்டம் ரத்து செய்யப்பட்டது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார், இது மக்களை மகிழ்வித்தது.

அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகையில்,
மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது. டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை. பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை. டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
- மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
- உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மதுரை:
மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-
* மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.
* மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கின்ற 4 மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மேலூர் வட்டத்தில் இருக்கின்ற கேசம்பட்டி கிராமம்-பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
மேலும், மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
* மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடி மங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இவை உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
- கடந்த கால அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டது தி.மு.க. அரசு.
- 4.54 லட்சம் பேர் மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுகின்றனர்.
ஊத்தங்குடி:
மதுரை மாவட்டம் ஊத்தங்குடியில் 63,698 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னனை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் மதுரை.
* திருச்செந்தூர் வேல் விவகாரத்தில் நீதி கேட்டு கலைஞர் நடை பயணத்தை தொடங்கிய மண் மதுரை.
* மதுரையை அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் நிகழ்ச்சி இது.
* அரசு விழாவா? மாநாடா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடைபெறும் நிகழ்ச்சி இது.
* கடவுளின் பெயரை பயன்படுத்தி வெறுப்பை விதைப்பவர்களுக்கு பதிலடி அளிப்பவர் பிடிஆர்.
* கடந்த கால அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டது தி.மு.க. அரசு.
* 4.54 லட்சம் பேர் மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுகின்றனர்.
* புதுமை பெண் திட்டத்தில் 63,400 மதுரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* மதுரை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 31,000 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
* மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8.60 லட்சம் பேர் மதுரையில் பயன்பெற்றுள்ளனர்.
* நம்மை காக்க 48 திட்டத்தில் மதுரையில் மட்டும் 16 ஆயிரம் பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
* நான் முதல்வன் திட்டத்தில் மட்டும் மதுரையை சேர்ந்த 1.17 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
* முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் மூலம் 2 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
* மதுரையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது.
* முதலமைச்சரின் முகவரி திட்டத்தில் 3.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கின்றனர்.
* எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அதனை தி.மு.க. அரசு முறியடிக்கும்.
* தி.மு.க. வளர்ச்சி அரசியலை முன்னெடுக்க, எதிர்க்கட்சிகள் வேறு எதோ அரசியலை முன்னெடுக்கின்றன.
* 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் இன்னும் மதுரைக்கு வரவில்லை.
* மதுரையில் நடந்த கீழடி அகழாய்வை நிறுத்த முயன்றது மத்திய பா.ஜ.க. அரசு.
* தமிழ்நாட்டிற்கு நிதியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது.
* மத்திய அரசு தமிழ் மீது வெறுப்புடன் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
- முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
- தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.
மதுரையில் 'தமிழ்நாடு வளர்ச்சி' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
* ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவசரம் என உணர்ந்தோம்.
* உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தேன்.
* தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியம்.
* பரவலான வளர்ச்சி என்பதை எங்களது செயல்கள் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறோம்.
* முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கினோம்.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீத முதலீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
* மாநிலத்தில் பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்த பின்னரே முதலீடு செய்வது குறித்து முடிவு செய்வர்.
* மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் மண் என்றுதான் கூறவேண்டும்.
* கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை.
* இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுத வேண்டும்.
* தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.
* தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
* விருதுநகரில் உருவாகி வரும் ஜவுளி பூங்காவால் 1 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை.
* தென்தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாக மதுரை மாறி வருகிறது என்றார்.






