search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்- தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அறிக்கை
    X

    தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்- தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அறிக்கை

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • ஒருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி ஊக்கத்தொகை விழாவில் வழங்கப்பட உள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக நாளை அவர் ஆலங்குளம் வழியாக குற்றாலம் வருகிறார். இதையொட்டி ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு வைத்து காமராஜர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை யிட்டு மரியாதை செலுத்து கிறார். தொடர்ந்து ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 557 இள ஞர்களுக்கு விளையாட்டு உப கரண ங்களை அவர் வழங்குகிறார்.

    அதனைத்தொடர்ந்து தென்காசி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடை பெறும் ஆய்வு கூட்ட த்தில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு தெ ன்காசி இசக்கி மஹாலில் தி.மு.க. இளை ஞரணி சார்பில் நடை பெறும் ஆலோசனை கூட்ட த்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகிறார். தொடர்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார். ஒருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. தொ டர்ந்து அதே வளாகத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி ஆலோ சனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு முதல் முறையாக வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×